16/05/2019

செல்வராஜ்

சிற்சில
துரோகங்கள்,
சிரிப்போடு
விலகிய ஒரு காதல்,
நெருங்கிய நண்பரின்
நடுவயது மரணம்,
நாளொரு கதை
சொல்லும் பாட்டியின்
நள்ளிரவு மரணம்,
நண்பனொருவனின்
நயவஞ்சகம்,
இதுவரைக்கும்
எதுவும் அதுவாய்
கடந்து போனதில்லை.

-செல்வராஜ்