15/09/2018

வெற்றி

*கற்பித்தல் என்பது அறம்...*
கற்பித்தலை வெறும் பதிவேடுகளை மட்டும் பராமரிக்க வேண்டும் என்றும்
தேர்வுகளுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதும் என்று சுருக்கி கொள்பவர்கள் ஆசிரியர் மாதிரி இருந்துவிட்டு போயிடலாம்... ஆனால் ஆசிரியராக மாற முடியாது...
ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் என்பவர் ஓவியர். ம.செ.அவர்களைப்போன்று அறத்துடன் இருக்க வேண்டும்... இயங்க வேண்டும்...

*ஓவியர். ஐயா. ம.செ.வைப்பற்றி சு.வெ..*

என் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் ஓவியர் மா.செ ஐயாவுக்கு நன்றி.

ஒருநாள் அவர் எனக்கு போன் செய்து

*``நான் இதைக் கேட்கக் கூடாது. இருந்தாலும் கேட்கிறேன். `நூறு நரம்புகளைக் கொண்ட யாழை அவள் மீட்டிக்கொண்டிருந்தாள்'னு எழுதியிருக்கிங்க. என்னால நூறு கோடு போட முடியாது. அதனால, எண்ணற்ற நரம்புகளைக் கொண்ட யாழைனு மாத்தலாமா?'' னு கேட்டார்*.

*எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. யாரும் அதை எண்ணிப் பார்க்கப் போவதில்லை. இருந்தாலும் இது கலை.இது கலை. அதற்கு நான் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறாரே. அது பெரிய விஷயம்.*

அவர் எவ்வளவு பெரிய மனுஷன். இப்படி மெனக்கிடுகிறாரே. அவரோடு இணைந்த இந்தப் பயணம் எனக்குப் பெரிய படிப்பினையைக் கொடுத்திருக்கிறது...
_சு.வெங்கடேசன்.
வேள்பாரி 100 வது அத்தியாய விழாவில்...

நாம் ஆசிரியர் மாதிரி இருக்க வேண்டுமா...?.
ஆசிரியராக இருக்க வேண்டுமா...?.
சிந்தியுங்கள் தோழமைகளே...
_வெற்றி.