21/09/2018

மனுஷ்ய புத்திரன்

பெரும் கூட்டத்தின் நடுவே
அயர்ந்து தூங்கும்
மனிதர்களை எனக்குப் பிடிக்கும்

பெரும் இரைச்சலுக்கு நடுவே
அமைதியாய்த் துயிலும்
நாய்களை எனக்குப் பிடிக்கும்

இந்த உலகத்தின்
வன்முறையை
நாம் வேறெப்படியும்
கையாள முடியாது

-மனுஷ்யபுத்திரன்