25/09/2018

குகன்

அந்த

மரம் கொத்தி

பார்த்தால் ...

நீ

என் மனம் கொத்திய

ஞாபகம் ..

இந்த

மீன் கொத்தி

பார்த்தால் ..

நீ

என் உயிர் கொத்திய

ஞாபகம் ..

எப்போதாவது

மரக்கிளையில்

குருவிக் கூடு

பார்த்தால் ..

உனக்காய்

நான் கட்டிய

மனக் கூடு

ஞாபகம்...

நீர் மீது

அழகாய்

வட்ட வட்ட

வளையல் பார்த்தால் ...

என் மனதிற்குள்

நீ விதைத்த

சலனங்கள் ஞாபகம் ...



ஏதேச்சையாய்

தத்திக் தவழும்

குழந்தை பார்த்தால் ..

என்

வாலிப வயதுகளிலும்

உனக்காக நான்

தவழ்ந்த ஞாபகம் ...

மழைக்காலத்தில்

கருமேகங்கள்

திரண்டு வந்து

பொய்த்துப் போனால் ..

நீ

என்னை விட்டு

விலகிய ஞாபகம் ..

எங்கேயாவது

தேங்கி நிற்கும்

தண்ணீர் பார்த்தால் ...

உனக்காக

நான்

தேக்கி வைத்திருக்கும்

என் கண்ணீர் ஞாபகம் ...

-      குகன்