01/09/2018

பழநி பாரதி

பறவைகளின் வலசை கண்டால்
மனம்
எண்ணத் தொடங்கிவிடுகிறது

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
கடைசிப் பறவை எங்கே?

அது ஏன்
தனியாகப் பறந்து வருகிறது

அய்ந்துக்கும் கடைசிக்கும் இடையில்
நின்றுகொண்டிருக்கிறேன் நான்

அது கடந்து போய்க் கொண்டிருக்கிறது

– பழநிபாரதி