25/09/2018

ச.ரவிச்சந்திரன்

அவள் இமை தடங்களில்
நான் இளைப்பாறிய காலங்கள் சுகமானவை
அவள் கரங்களில் நான் தஞ்சம் அடைந்த கணங்களோ
என் வாழ்வின் வசந்த காலம்
அவளோடு இணைந்து நடந்த பாதையை
அசைபோட்டு பார்க்கிறேன்
நடக்கமுடியாமல் முட்டிகளில்
வலிசுமந்த போதும் இந்த தருணத்தில்
நினைவு தடங்களில் அவள்
நின்று ஒளிரும் தூங்கா விளக்கு
அவளோடு கல்லூரி நூலகத்தில்
அமைதிமொழி பேசிய அந்த தருணங்கள்
அழிக்க முடியாத காவியமாக
அந்த காவியத்தின் பக்கங்களை
அமைதியின் துணையோடு படிக்கிறேன் மவுனமாக
என் நினைவுகளை குறுக்கிடாதீர்கள்
அவளோடு பயணிக்கட்டும்
என் எஞ்சிய காலங்களை
இது ஐம்பதை கடந்தவனின் காதல்
இந்த நினைவுகளின் எச்சமாக கண்களில்
இரண்டு துளி கண்ணீர்
என் கண்களின் ஈரப்பசை காயாமல்
என்னோடு வரும் என் இறுதி வரை

கவிஞர் ச .ரவிச்சந்திரன்