அந்த நெடுஞ்சாலையை
கடக்கும் போதெல்லாம்
கிழவன் செருப்பு அணிவதில்லை.
கொழுத்தும் கோடையிலும்
கிழவனுக்குக் கால்கள்
சுடுவதில்லை.
மாறாக
அவ்வப்போது கண்கள்
வியர்ப்பதைத் தவிர்க்க முடிவதில்லை அவனால் ...
எதுவாகிப் போனாலும் உண்ணாமல் உழுது உணவளித்த கிழவனின் வயல் அது...!
- துளசி ராஜா