காந்திமதி அம்மன் தேர் இப்போது
கண்ணாடிக் கூண்டுக்குள்.
பேராச்சி அம்மன் படித்துறைக் கல்
பெயர்ந்து கிடக்கிறது.
நாற்கரச் சாலை நடுவில் நகர் நீங்கிய
செவ்வரளிக் குலுங்கல்.
இடைநில்லாப் பேருந்து இருக்கையில்
கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்
' நான்கு சகோதரிகளு'க்குள் மூத்தவள்.
*~ ஷங்கர ராமசுப்ரமணியன்*