10/10/2018

ஷங்கர ராமசுப்பிரமணியன்

காந்திமதி அம்மன் தேர் இப்போது
கண்ணாடிக் கூண்டுக்குள்.

பேராச்சி அம்மன் படித்துறைக் கல்
பெயர்ந்து கிடக்கிறது.

நாற்கரச் சாலை நடுவில் நகர் நீங்கிய
செவ்வரளிக் குலுங்கல்.

இடைநில்லாப் பேருந்து இருக்கையில்
கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்

' நான்கு சகோதரிகளு'க்குள் மூத்தவள்.

*~ ஷங்கர ராமசுப்ரமணியன்*