10/10/2018

வண்ணதாசன்

உத்திரத்துத் தொங்கலில் இருந்து
இறக்கிப் போட்டிருந்த ராசம்மா அத்தையின்
நுனியுடைந்த முன்பல்லோடு பிளந்த வாயில்,
அகன்று நிலைகுத்திய கண்களில்,
கைக்குட்டை வைத்திருக்கும் பாவனையில் விரல்கள்  திருகிய இடக் கையில்
துப்பப் பட்டு
வாசிக்கப்பட்டு
நழுவவிடப்பட்டு இருந்தது
தடயம் ஏதும் விடாத,
உச்சரிப்புக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு
உப்புக் கரித்த சொல்.

*~வண்ணதாசன்*