06/10/2018

சாமி கிரிஷ்

வலி...

எனக்கு நினைவுதெரிந்த
நாள்களுக்கு முன்பிருந்தே
குடும்ப பாரத்தைத்
தூக்கிச் சுமக்கும் அம்மா
ஒருவழியாய்
வாழ்வின் கவலைகள்
வடியத் தொடங்கிய நாளொன்றில்
காலில் முள் குத்திவிட்டதென
எடுத்துவிடச் சொன்னாள்.
அவளின் தேய்ந்து வெடித்த பாதங்களில்
இதற்குமுன்  எத்தனையோ முட்கள்
ஆணியாகியிருந்தன...
ஒரு சிறுமுள்ளின்
வலியை உணரவே
அம்மாவுக்கு
அரை நூற்றாண்டு வாழ்க்கை முடிந்துவிட்டிருந்தது...

- சாமி கிரிஷ்