10/10/2018

ரியோகான்

எதற்கும் ஆசைப்படாமல் சோம்பலுற்றிருக்கிறேன்

உலகம் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டுமென

விட்டுவிட்டேன்

என் பையில் பத்துநாளுக்கான அரிசியிருக்கிறது

கணப்பு அடுப்பருகே ஒரு கட்டுச் சுள்ளியிருக்கிறது

எதற்கினி மாயத்தையும் ஞானத்தையும் பற்றிய

புலம்பல்,

கூரையில் பெய்யும்

இரவு மழையைக் கேட்டபடி

சாவகாசமாக அமர்ந்திருக்கிறேன்

கால்இரண்டையும் வசதியாக நீட்டிக் கொண்டு.

-ரியோகான்