26/08/2018

ம.செந்தமிழன்

அறம் என்பது பிற உயிர்களுக்குத் தீமை தரா வாழ்க்கை முறை. பேராசைகள் அற்ற, தற்பெருமைகள் அற்ற, சக உயிர்களைச் சுரண்டும் எண்ணம் இல்லாத வாழ்வியல், அறம் எனப்படும். இந்த அறம் எப்போதெல்லாம் அழிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஊழி நிகழ்த்தப்படும். மனிதர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களை எச்சரித்து வைக்கவும் கூறப்பட்ட நீதிக்கதை அல்ல இது, மாறாத உண்மை. ஊழியில் தப்புவதும் வாழ்வுக்கு மீண்டு செல்வதும் இப்போதைய தேவையாக உருவாகியுள்ளது.!

-ம.செந்தமிழன்