18/06/2019

மல்லிகா ராம்

கை வளையல்களில்
புதுவித டிசைன்களை
தேடினாள்!
பல மணித்துளிகளாய்..!

நெற்றிப்பொட்டு
பளிச்சென இருக்க
அலசினாள்
சில நாழிகைகளாய்!

காதணியும் கழுத்தணியும்
அணிந்து பார்த்து
வாங்கினாள்
அரை நாட்களாய்!

புது ரக சேலையை
தேர்வு செய்ய
கடைகளில்
தேடினாள், நாள் முழுக்க..

காலம் பூரா
வாழப்போகும்
ஆண் மகனை மட்டும்
பார்த்த நொடியில்
தேர்ந்தெடுத்தாள்
காதல் என்ற பெயரில்!

————————-
மல்லிகா ராம்