சாயல்
ஏறிய நெற்றியும் நீண்ட மூக்கும்
அச்சுஅசலா தாத்தாதான்
சுருள்சுருளாய் முடி `அடியாத்தி
அவுக அம்மாச்சியை உரிச்சுவெச்சிருக்கா...
கண்ணு அப்படியே அத்தையோடது’
தொட்டிலில் தூங்கும்
குழந்தையின் சாயலை
ஆளாளுக்கு அளந்துவிட்டனா்.
எந்தக் கதைக்கும் பொருந்தாத
ஏதோ ஒரு கதை கேட்டு
இதழ் குவித்துச் சிரித்துக்கொள்கிறது
தூக்கத்தில் குழந்தை.
- காசாவயல் கண்ணன்.