14/11/2018

தேவதேவன்

நீண்ட நேரம் மேஜை வாசத்தை விட்டு வெளியே வந்தேன்
பூமி பறந்துவிடாதிருக்க
வைத்த பாரங்கள் போல
மரமும் தோப்பும் மலைகளும் புற்களும்
மனிதர்களின் குடியிருப்பும் அவ்வாறே காற்றில் துடிக்கும் மேஜை போல
ஒரு வேதனை
அன்று உணர்ந்தேன்
மனதை அழுத்திக்கொண்டிருக்கும்
பளு என்னவென்று

-தேவதேவன்