“பச்சை விறகுகளை
கழுத்து நடுங்க கட்டிச்சுமந்த
வயிற்றுப் பிள்ளைக்காரி
வீடு வந்து சேர்ந்ததைப் போல்
பதற்றமற்ற இந் நிலைக்கு
இங்கு வந்து சேர்வதற்குள்
நீங்கள்
உருவாக்கிப் பேசிக்கொண்டிருந்த
எத்தனை என் கதைகளை
கடக்கும்படி ஆயிற்று நான்.”
- இளம்பிறை.