27/10/2020

மகுடேசுவரன்

பழங்காலத்தில் 
சொல்லத் தெரியாதவன் பாமரன்.

பிற்காலத்தில் 
படிக்கத் தெரியாதவன் பாமரன்.

முற்காலத்தில் 
தாய்மொழி தெரிந்திருந்தாலும் 
ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்.

தற்காலத்தில் 
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் 
கணினி தெரியாதவன் பாமரன்.

காலம் 
புதுப்புதுப் பாமரர்களை 
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது !

நம்மைப் பாமரனாக்கும் உலகைத்தான் 
நாமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் !

 

-மகுடேசுவரன்