பழங்காலத்தில்
சொல்லத் தெரியாதவன் பாமரன்.
பிற்காலத்தில்
படிக்கத் தெரியாதவன் பாமரன்.
முற்காலத்தில்
தாய்மொழி தெரிந்திருந்தாலும்
ஆங்கிலம் தெரியாதவன் பாமரன்.
தற்காலத்தில்
ஆங்கிலம் தெரிந்திருந்தாலும்
கணினி தெரியாதவன் பாமரன்.
காலம்
புதுப்புதுப் பாமரர்களை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது !
நம்மைப் பாமரனாக்கும் உலகைத்தான்
நாமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் !
-மகுடேசுவரன்