உன்னையே நான் கண்ணிமைக்காமல்
உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை கவனிக்காமல்
அந்த ஆடித் திருவிழாவில் நீ
சிறுபிள்ளையாய் மாறி
சோப்பு நீர்க் குமிழிகளை
உடைத்து உடைத்து உன்னையே மறந்து
விளையாடிக்கொண்டிருந்தாய்...
இந்தப் பக்கமாய் எனது உலகம்
உடைந்து நொறுங்கியதையும்
உனக்கான எனது இதயம்
அந்தக் குமிழிகளைப் போலவே
வெடித்துச் சிதறியதையும் அறியாமலே..
நீ பிரிந்து போய்
இத்தனையாண்டுகள்
கடந்த போதும்
இப்போதும் கூட
குமிழிகளை உடைத்து விளையாடும்
குமரிகளைப் பார்த்தால்
பதைக்கிறது மனம்
நடுங்குகிறது விரல்
யாரோ ஒருவனின் உலகம்
அந்த பக்கம்
உடைந்து கொண்டிருப்பதையெண்ணி..
வழிப்போக்கன்..