முத்துவேல் கவிதைகள்..
>பழுத்த இலை ஒன்று மரத்திலிருந்து அவிழ்வதும்
பனம்பழம் அதுவாய் கனிந்து வீழ்வதும்
அடை மழைக்கால ஏரி மடை உடைவதும்
சிறு காற்றில்
செவ்வரளி உதிர்வதும் போலத்தான்
அன்பின் நிலையதும்..
>ஞாபகம்
ஒரு பொல்லாத மிருகம்
நிகழ்காலத்தை காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு
இறந்த காலத்திற்கு எடுத்து தருகிறது இதயத்தை..
>என் பெயர்
எவ்வளவு சுமையானதாக இருக்கும் உனக்கு
வேண்டாம்
அதை கழட்டி உருவி கள்ளிப் புதருக்குள் வீசிவிட்டுப் போ..
>புறக்கணிக்கப்பட்ட அன்பு
தாய் இறந்த
கண் திறவா நாய்க்குட்டியாக சாலையோரம் நடுங்குகிறது
மழையில்..