கவிஞர் பழனிபாரதி பிறந்தநாள் பகிர்வு
*மணி
*தேடல் இன்பம்...,
தேடுவது துன்பம்..!
# பழனிபாரதி
*முதுமையும் ஒரு குழந்தைதான், தாலாட்ட வேண்டாம்., தள்ளாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
-பழனிபாரதி
*விலைக்கு வாங்கி வந்த கிளி, தமிழ் மொழியை பேசுவது இனிமையாக இருந்தாலும் வருத்தம் தான் தாய்மொழியை மறந்தது...
#பழனிபாரதி
*ஆள் நடமாட்டம் இல்லா இடத்தில்
என்னோடு நீ,
உன்னோடு நான்,
நம்மோடு இளையராஜா
-பழனிபாரதி
*வண்ணத்துப் பூச்சியை விடவும் அழகாய் பறக்கிறது அதன் நிழல்
-பழனிபாரதி
*ஊளையும் குரைப்பும்
கேட்கின்றன...
உறுமலும் பிளிறலும்
காணவில்லை
எச்சில் தின்று பழகிவிட்டோம்
கரைதல் போதும் நமக்கெல்லாம்
- பழனிபாரதி
*பூஜையறை
ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
ஸ்டிக்கர் கோலங்கள்
டப்பர்வேர் டப்பாவிலிருந்து ஊற்றுகிறார்கள்
விளக்குக்கு எண்ணெய்
ஒலிநாடா ஒப்புவிக்கும்
கந்தர் சஷ்டிக் கவசம்
கடவுள் ஏன் கல்லானான்
கேட்டான் கண்ணதாசன்
கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
-பழனிபாரதி
*போகிறாய் என்பதையே
மறக்கடித்து விடுகிறது
நீ திரும்பிப் போகிற அழகு
-பழனிபாரதி
*குழந்தைபோல் வளரும்
இந்த இரவுக்கு
ஒரு பெயர் சூட்ட நினைத்து
அதன் காதில்
மூன்றுமுறை சொல்கிறேன்
உன் பெயரை
-பழனிபாரதி
*இருள் என்ன செய்துவிடும்
உடலே விளக்காய் எரியும்
இந்த மின்மினிகளை...
- பழனிபாரதி
*நாற்காலிகளெல்லாம்
பாடைகளாக
கூட்டணி சேர்கின்றன
ஊர்வலம் போக
- பழனிபாரதி
*உருகிய தார்ச்சாலையில்
பதிந்து கிடக்கிறது
தலைச்சுமையை தாங்கமுடியாமல்
நடந்த யாரோ ஒருத்தியின் பாதச்சுவடு
-பழனிபாரதி
*குடத்திற்கும் குழந்தைக்கும்
வித்தியாசம் தெரியாமல் சுமக்கிறார்கள்
அம்மாக்கள்
-பழனிபாரதி
*இளைப்பாற வருகிறவர்களின் நிழலில்
இளைப்பாற முடியாமல்
தவிக்கிறது நிழல்
-பழனிபாரதி
தோழமையுடன் மணிகண்டபிரபு