24/07/2020

தாருண்யன் ரவி

விவசாயி ஒருவன் உருக்கமாக வேண்டியதற்கு மதிப்பளித்துக் கடவுள் அவன் முன் தோன்றினார்.
“எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே... ஏன் அவளை இவ்வளவு கருணை பொழியும் உள்ளத்தோடு படைத்தாய்?” என்று கேட்டான்.
கடவுள் சொன்னார்: “அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
“ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல்கலை நிபுணராகப் படைத்தாய்?”
“அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்.”
கடைசியாக அவன் கேட்டான்: “எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்?”
கடவுள் சொன்னார்:
“அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.”

-தாருண்யன் ரவி