ஒவ்வொரு எழுத்தாளனும் நன்றி தெரிவிக்கவேண்டிய விருட்சம் பனைமரம்.
பனை ஓலையைச் சீவிப் பதப்படுத்தி, எழுத்தாணியால் கீறி எழுதுவது எளிமையானதல்ல. அதற்கு தேர்ந்த பயிற்சியும் வலுவும் தேவை. ஒரு பனை நறுக்கில் அதிகபட்சம் ஆறேழு வரிகள் எழுதலாம். எழுத்தாணி பிடித்துப் பிடித்து விரல் ரேகை அழிந்துவிடும். எனில், சிலப்பதிகாரமும் கம்பராமயாணமும் எழுதிய கைகள் எவ்வளவு தேய்மானம் அடைந்திருக்கும்!
எஸ்.ரா