தமிழ் எழுத்தாளன்
கவிதை என்பதே கற்பனையின் சூழ்ச்சி.
- பாரதி
‘
கவிதை சொற்களில் இல்லை, ஒலிநயத்தில் இல்லை; கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக்காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது.
- ந. பிச்சமூர்த்தி
‘
அறிந்தவற்றில் தொடங்கி அறியாத, அறியவே முடியாத ஒன்றில் முட்டிச் செயலிழப்பவை கவிதைகள்.
- பிரமிள்
‘
மனித உள்ளத்தின் மர்மத்தை அறியும் மார்க்கங்களில் ஒன்று கவிதை.
- க.நா.சு.
‘
எந்த வரிகளின் முன் இதயத்தையும் மூளையையும் ஒருசேர நீ இழக்கவும் பெறவும் செய்கிறாயோ அதுவே உனக்கான கவிதை.
- க.மோகனரங்கன்
‘
கவிதையில் அழகுக்கான முயற்சிகள் (உவமை, உருவகம், படிமம், அலங்காரம்) எதுவும் தேவையில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படையை எங்கோ ஒரு இடத்தில் தொட்டுவிடுவதில் கவிதை இருப்பதாகத் தோன்றுகிறது.
- யவனிகா ஸ்ரீராம்
‘
மொழி தன் இயல்பான இயக்கத்தின் மூலம் சென்றடைய முடியாத தளங்களுக்கு மொழியை சிறப்பு அழுத்தம் தருவதன் மூலம் கொண்டு செல்ல முயலும் கலையே கவிதை. மொழிக்குள் செயல்படும் இன்னொரு தனி மொழியை கவிதை உருவாக்குகிறது.
- சுந்தர ராமசாமி
‘
நான், கவிதை உட்செவியில் எப்பொழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையைச் சார்ந்தவன். கவிதை எழுப்பும் பரவச நிலையை வார்த்தைகளிலிருந்து பிரிக்க முடியாதென்றால், கவிதையின் வார்த்தைகள் நமது உப-போத மண்டலத்தில் ரீங்கரிப்பதற்கு ஒரு காரணம் ஓசை.
என் அனுபவத்தில் எந்த உயர் கவிதையிலும் உச்ச கட்டம் என்பதில் ஓர் அபூர்வ எளிமை, ஆழம், தெளிவு இருக்கின்றன.
- நகுலன்