27/04/2019

ராஜா சந்திரசேகர்

அலைகளோடு

கடலருகே அமர்ந்து
எழுதிக்கொண்டிருந்தேன்
ஒரு கதாபாத்திரம்
ஓடிப்போய்
அலைகளோடு
விளையாடி விட்டு
கதைக்குத் திரும்பி விட்டது

- ராஜா சந்திரசேகர்