கடைசி அற்புதம்
வயதாக வயதாக
அற்புதங்கள் நிகழ்வது
குறைந்துகொண்டே வருகிறது.
பிறகு நாம்
நீண்ட நேரமாக
பொறுமையிழந்து
காத்துக்கொண்டிருக்கிறோம்
அந்தக் கடைசி அற்புதத்திற்காக.
-மனுஷ்யபுத்திரன்