மனித மனம் அன்புக்கு ஏங்குவதாக இருக்கிறது.
சில நல்ல வார்த்தைகளுக்காக உருகிப்போய் காத்துக்கொண்டிருக்கிறது.
அங்கீகாரத்திற்கு பசித்திருக்கிறது.
காதலையும்
காமத்தையும் தேடி அலைகிறது.
இவை மறுக்கப்படும்போது,துயருற்று வருத்தம் கொள்கிறது.
அதீத வருத்தத்தில் வக்கிரம் கொள்கிறது.
தனக்கு நெருக்காமானவர்களையும்
தொடர்பே அல்லாதவர்களையும் துன்புறுத்தி, தானும் துன்புற்று மடிகிறது.
எல்லா நிலைகளிலும் தன்னை ஒரு படி ஏற்றமாக காண்பிக்க முற்படுகிறது.
அதற்காக அடுத்தவனை தாழ்த்தி ஒடுக்குகிறது.
இதுதான் எல்லா மனிதர்களும் பொதுவாக செய்யும் சல்லித்தனம்.
_அனுராதா ஆனந்த்.
(விகடன் தடம்)