06/03/2019

சி.மோகன்

மாயக் கவித்துவம்
சி. மோகன்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலொன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில் மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்.
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
உன்னைப் பார்க்காது
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்திற்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

(எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை" தொகுப்பு,