நாற்கர பெருவழியில்
சக்கரம் ஏறிச்
செத்த நாயுடல்
அப்படியே கிடக்கிறது..
அகற்றப்படுவதே இல்லை..
மேலும் மேலும் ஏறி
நொறுக்கி
எலும்பைக் குழம்பாக்கிக் கடக்கின்றன வாகனங்கள்..
நன்றியைத் தவிர
வேறுணர்வற்ற
வால்குழைவைத்
தவிர செயலறியாத
ஒரு ஜீவனுக்கு
என்னே நம் கைம்மாறு..
மகுடேசுவரன்..