30/05/2020

மகுடேசுவரன்

நாற்கர பெருவழியில்
சக்கரம் ஏறிச் 
செத்த நாயுடல் 
அப்படியே கிடக்கிறது..

அகற்றப்படுவதே இல்லை..

மேலும் மேலும் ஏறி 
நொறுக்கி 
எலும்பைக் குழம்பாக்கிக் கடக்கின்றன வாகனங்கள்..

நன்றியைத் தவிர 
வேறுணர்வற்ற
வால்குழைவைத் 
தவிர செயலறியாத
ஒரு ஜீவனுக்கு 
என்னே நம் கைம்மாறு..

மகுடேசுவரன்..