12/05/2020

மகுடேசுவரன்

எல்லாரும் 
நிலா காணமாட்டார் !

யாருமில்லாத வெறுமை
ஏதுமில்லாத மனம் 
முன்னிரவுத் தனிமை 
முகிலற்ற வானம்  
முள்குத்திய நெஞ்சம் 
அடக்க வேண்டிய அழுகை
உதிர்க்க வேண்டிய நினைவு
கழிக்க வேண்டிய காதல் என 
என்னென்னவோ 
வாய்க்க வேண்டும்
அதற்கு.

-மகுடேசுவரன்