வேட்டைப் பொழுதுகள்...!
------------------------------------
மாமிசப் பட்சியின் குரூர கண் கொண்ட
தோல்வி
தலை சிலுப்பி தொண்டைக்குழி விரிந்து சுருங்க
லாவகமாய் விழுங்கிற்று இந்நாளையும்
விடியலில் கிளம்பிய முயற்சியின்
திரள் பறவைகளை ஒன்றுவிடாமல் வீழ்த்தியதில்
தேர்ந்த வேடர்களாயின முப்பொழுதும்
என் கதவை நானே திறக்க அச்சப்படுகையில்
எவருக்கு ஏதுவாகும் அதன் தாழ்
வலையின் பிளிறல்
தூண்டிலின் கர்ஜனை
தோட்டாக்களின் சப்த சிதறல்
இதென்ன வன வாழ்வா....?
ஆங்கோர் தேடலின் நிலை ,தனித்த
ஓர் காகத்தின் நெடுநேரக் கரைதலாய்
நனையாத வேர்களின் மீதான வருத்தம்
விதைகளுக்கில்லை
நாளை என்பது நாளைய பாடு
இன்றேனும்
கசியும் இவ்விரவை தூக்கம்
கவனமாய் எதிர்கொண்டால் தேவலை..!
-காடன்-