மனிதனைத் தவிர, வேறு எந்த
விலங்கும் தனது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க
விரும்புவதே இல்லை. மனிதர்கள் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு செயலிலும் கடந்த காலத்தைத்
திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு
போதும் திரும்பிப் போக முடியாத கடந்த காலம் ஏன்
மனிதர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது?
நாட்கள் கடந்துபோய்விட்டன. நிகழ்வுகள் கடந்து
போய்விட்டன. ஆனால், அது ஏற்படுத்திய வலியும், வேதனையும் கடந்துபோவது இல்லை. வலி உறைந்துவிடுகிறது.
அதுதான் மவுனக்கின் சாரமா?
ஞானக்கூத்தனின் கவிதை ஒன்றில் 'வெள்ளைப்
பேப்பருக்கு முன்பக்கம், பின்பக்கம் என்று கிடை
யாது, எதை முதலில் பார்க்கிறோமோ, அதுவே அதன்
முன்பக்கம்' என்றொரு வரியை வாசித்திருக்கிறேன்.
மவுனத்துக்கும் முன்பக்கம், பின்பக்கம் உண்டா?
.உங்கள் பேச்சு மவுனத்தை விடச் சிறப்பாக இருக்கு
மானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மவுனமே
நல்லது என்கிறது கிரேக்க ஞானம். மவுனம் என்பது வாய்
மூடியிருப்பது மட்டுமில்லை; அதிலும் உயர்ந்த மவுனம் இன்
னொன்று உள்ளது. அது அகத்தினுள் நிகழும் மவுனம்.
வாயை மூடிக்கொண்டிருக்கும் மவுனமும் நமக்குத் தேவை.
ஆழமான அகமவுனமும் தேவை. இரண்டும் எளிதில் உரு
வாகிவிடுவதில்லை.
நம் பிரச்சினைகளுக்குக் காரணம் எங்கே பேசக் கூடாது
எனத் தெரியாமல் போனதுதான். ஞானிகள் குறைவாகப்
பேசுவதற்குக் காரணம், அவர்களுக்கு மவுனத்தின் வலிமை
புரிந்திருப்பதுதான். மவுனத்தைச் சுமையாக்கிக்கொள்பவர் களும் இருக்கிறார்கள். சக்தியாக மாற்றிக்கொள்பவர்களும்
இருக்கிறார்கள்.....
எஸ் ரா