இடுக்கில் பிள்ளையை இடுக்கிக்கொண்டே
மீன் மார்க்கெட்டில்
புஷ்பலீலா கேட்கிறாள்
கல்யாணம் செய்து கொள்ளும்
உத்தேசமே இல்லாயா என்று.
தாடி எல்லாம் பெரிதாக இருக்கிறதாம்.
என்ன விஷயம் என்று சிரிக்கிறாள்.
மீன் வாங்க வந்தால்
மீன் வாங்கிவிட்டுப் போனால் என்ன
எதற்கு இப்படி உயிரை வாங்குகிறாள்
இந்த பஷ்ப லீலா?
_கல்யாண்ஜி