எழுத்தாளன்
நான் ஏன் எழுத்தாளனாக மாறினேன். தனிமை மிக மோசமானது. மனதில் வார்த்தைகள் மட்டும் இல்லாமல் போய் விட்டால் மனிதர்களால் வாழமுடியாமல் போய் விடும்.
- தஸ்தாயேவ்ஸ்கி
‘
கலைகள் மீதான ரசனை என்கிற மென்மையான பரவசத்தை விட்டுவிட்டு, வேறு எதனையும் முழுமையாக அனுபவித்து வாழ்கிறதொரு வாழ்க்கை எப்படி சாத்தியம்?
- ஜூலியன் பார்ன்ஸ்
‘
கலைஞன் மன நோயிலிருந்து தப்பிக்கவே தனது கலையை உபயோகிக்கிறான்.
- சிக்மண்ட் ஃப்ரெய்ட்
‘
எழுத்து எனக்கு ஒரு வடிகால். என் ஜீவியத்தின் ஆதாரம்.
- நிக்கி கியோவன்னி
‘
எழுத்தாளனாக இருப்பதைத் தவிர வேறு எதுவுமாக என்னால் இருக்க முடியாதென்பதால் எழுதுகிறேன்.
- எம்.டி.வாசுதேவன் நாயர்
‘
எழுதுவதற்கான எந்தத் திறமையும் என்னிடம் இல்லையென்பதைக் கண்டுகொள்ள எனக்குப் பதினைந்து வருடங்கள் ஆயின. அதன்பிறகும் என்னால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஏனெனில் நான் எழுத்தாளனென்று பெரும் புகழடைந்துவிட்டேன்.
- றொபேட் பெஞ்ச்லி