எந்த சாமியும் கும்பிடாத செல்வியக்கா
எல்லா கிறிஸ்மஸ்க்கும்
ராத்திரி பன்னண்டு மணிவரைக்கும்
முழிச்சிருந்து
சர்ச்சில் வெடிக்கும்
பட்டாசப் பார்த்துட்டுத்தான் தூங்கும்
ஏசுசாமியவா கும்பிடுற
ஏன் தூங்காமலிருக்கற
என்று யாராவது கேட்டால்
ஒரு குழந்தை பிறக்கப்போகுதுன்னு
தெரிஞ்சிட்டு பார்க்காமல்
எப்படித் தூங்கறது
என்று கேட்டுச் சிரிக்கும்.
~ Manjula Devi