அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்க தம் அறிவார் அறிவோரே
அறிவார்ந்த தத்துவ ஞானங்களை அறிவில்லாதவர்களிடத்தில் தெரியப் படுத்த வேண்டாம்.அறிவுடைய அறிஞர்பெருமக்களுக்கும் அதை அறிவிக்க வேண்டியது அவசியம் இல்லை..அறிவு இருந்தும் அறியாமையினால் தெளிவுக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே அறிவிக்கத் தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள்
- திருமூலர்.