நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.
இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.
மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.
செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.
உங்கள் அறிவியல்
கண்டு பிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று.
-படித்தது