சபரிதமிழ்எழில்
05/12/2020
வண்ணதாசன்
அந்த நாற்காலியைப் பார்க்கும் போது
மரத்தை நினைக்காதீர்கள்.
அப்புறம் உங்களால்
அதில் உட்கார முடியாது.
மரத்தின் கீழ் பழம் பொறுக்கும் போது
நாற்காலியை யோசிக்க வேண்டாம்.
அப்புறம் உங்களால்
அந்தக் கனியைப் புசிக்க முடியாது.
~ வண்ணதாசன் ~
Newer Post
Older Post
Home