05/12/2020

வண்ணதாசன்

அந்த நாற்காலியைப் பார்க்கும் போது 
மரத்தை நினைக்காதீர்கள்.
அப்புறம் உங்களால் 
அதில் உட்கார முடியாது.

மரத்தின் கீழ் பழம் பொறுக்கும் போது
நாற்காலியை யோசிக்க வேண்டாம்.

அப்புறம்  உங்களால்
அந்தக் கனியைப் புசிக்க முடியாது.

~ வண்ணதாசன் ~