அன்பின் நிமித்தம்
யாரையும் இப்போது நான்
பின் தொடர்ந்து செல்வதில்லை
என்னால்
முன்னைப்போல நடக்க முடியவில்லை
என்பதால் அல்ல
சற்று தொலைவுபோனதும்
அவர்களே ஒரு பனித்துளிபோல
ஆவியாகிவிடுகிறார்கள்
அவர்கள்
அந்தப் புல்லில்
அதற்கு முன் இருக்கவேயில்லை
என்பதுபோல
~ மனுஷ்ய புத்திரன்